இலங்கை

சிங்கப்பூருக்கு 26 நாய்க்குட்டிகளைக் கடத்திய நபருக்கு நேர்ந்த கதி

மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு 26 நாய்க்குட்டிகளையும் ஒரு பூனையையும் நபர் ஒருவர் கடத்தியுள்ளார்.

குறித்த நபருக்கு 12 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு (2022) அக்டோபர் 18ஆம் தேதி, அந்த மலேசிய நபர் லொரியில் சிங்கப்பூருக்கு வந்துசேர்ந்ததும் அவர் கடத்திவந்த நாய்க்குட்டிகளில் ஒன்று உயிரிழந்துள்ளது.

அதையடுத்து எஞ்சியவற்றில் 18 நாய்க்குட்டிகள் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் முதல் இவ்வாண்டு மார்ச் வரை தேசியப் பூங்காக் கழகமும் அதன் பங்காளித்துவ அமைப்புகளும் மொத்தம் 19 விலங்குக் கடத்தல் சம்பவங்களைக் கண்டறிந்தன.

தேசியப் பூங்காக் கழகம், சட்டவிரோத விலங்கு வர்த்தகத்துக்கு எதிரான நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறது.

அத்தகைய நடவடிக்கைகளின் மூலம் விலங்குக் கடத்தல், சட்டவிரோத விலங்கு வர்த்தகம் போன்றவற்றைக் கட்டுக்குள் கொண்டுவர முனைகிறது தேசியப் பூங்காக் கழகம்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!