ஜெர்மனியில் இரு பெண்களை கொலை செய்தவருக்கு நேர்ந்தக் கதி!

கடந்த ஆண்டு ஜெர்மனியின் நியூஷ்வான்ஸ்டீன் கோட்டைக்கு அருகே மர்மமான முறையில் உயிரிழந்தனர்.
குறித்த குற்ற சம்பவத்துடன் அமெரிக்கர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் தனது குற்றங்களை இன்று (19.02) ஒப்புக்கொண்டுள்ளார்.
31 வயதான பிரதிவாதி தனது விசாரணையின் தொடக்கத்தின் போது குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார் என்று ஜெர்மன் செய்தி நிறுவனம் dpa தெரிவித்துள்ளது.
அவர் மீது கொலை, பாலியல் பலாத்காரம், கொலை முயற்சி மற்றும் குழந்தைகளின் ஆபாசப் படங்கள் வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஜெர்மனியில் கொலைக் குற்றச்சாட்டுகளுக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
(Visited 13 times, 1 visits today)