ஆசியா

சிங்கப்பூரில் பெண்ணை தாக்கியவருக்கு நேர்ந்த கதி

சிங்கப்பூரில் பெண்ணை தாக்கியவருக்கு மூன்று மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

57 வயதுப் பெண்ணை நோக்கி இனவாதக் கருத்துகளை வெளிப்படுத்தி அவரைத் தாக்கிய நபருக்கே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

2021-ஆம் ஆண்டு நடந்த அந்தச் சம்பவத்துக்காக, 32 வயதுச் சிங்கப்பூரர் வோங் சிங் ஃபோங்கிற்கு (Wong Xing Fong) அந்தத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஹிந்துச்சா நீட்டா விஷ்ணுபாய் (Hindocha Nita Vishnubhai) என்னும் பெண்மணியை இனவாத நோக்கில் அவர் திட்டித் துன்புறுத்திய குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது.

விரைவுநடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த திருவாட்டி நீட்டா முகக்கவசம் அணியவில்லை என்பதைக் காரணம் காட்டி வோங் அவரைத் திட்டியதோடு மார்பில் எட்டி உதைக்கவும் செய்தார்.

தாக்குதலால் கீழே விழுந்த நீட்டாவுக்குப் பல்வேறு இடங்களில் காயங்கள் ஏற்பட்டன. அந்தச் சம்பவம் குறித்த தகவல் ஊடகங்களில் வெளியானது

இதன் போது, பிரதமர் லீ சியென் லூங், சட்ட-உள்துறை அமைச்சர் கா. சண்முகம் உள்ளிட்ட சிங்கப்பூர் அரசியல் தலைவர்கள் சிலர் அதிருப்தியும் ஏமாற்றமும் தெரிவித்திருந்தனர்.

(Visited 14 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content