பிரான்ஸ் தலைநகரில் குழு மோதலில் சிறுவனுக்கு நேர்ந்த கதி

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் 14 வயதுடைய சிறுவன் ஒருவர் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
ஜனவரி மாதம் 17ஆம் திகதி மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ரயில் நிலையத்துக்கு நேற்று மாலை குழு மோதல் ஒன்று இடம்பெற்றது. பதின்ம வயதுடைய சிறுவர்கள் பலர் ஒருவரை ஒருவர் தாக்கி மோதலில் ஈடுபட்டிருந்தனர்.
அதன் போதே குறித்த 14 வயதுடைய சிறுவன் மீது வாள் வெட்டு இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மிக துல்லியமான தகவல்கள் வெளியாகவில்லை என்றபோதும், சிறுவன் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார் என அறிய முடிகிறது.
சென்ரெனிஸ் நகரம் கடந்த சில நாட்களாக பரபரப்பாக இருந்ததாகவும், அருகருகே இருக்கும் இரு நகரங்களைச் சேர்ந்த இளைஞர்கள் அவ்வப்போது மோதலில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
(Visited 15 times, 1 visits today)