இலங்கை செய்தி

குடிபோதையில் நீர்நிலையில் விழுந்து இளைஞருக்கு நேர்ந்த கதி

பண்டாரவளை – லியாங்கஹவல பகுதியில் உள்ள வாங்கேடி கிணற்றில் குளிப்பதற்குச் சென்ற 22 வயதுடைய இளைஞர் ஒருவர் இன்று (26) நீரில் விழுந்து காணாமல் போயுள்ளதாக லியங்கஹவல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நீர்நிலைக்கு அருகில் குளிப்பதற்கு தயாரான போது வழுக்கி நீரில் விழுந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அவர் நண்பர்கள் குழுவுடன் குடிபோதையில் இருந்ததாகவும், பின்னர் நீராடச் சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

சடலத்தை தேடுவதற்காக கிரிந்த கடற்படை துறைமுகத்தில் இருந்து டைவிங் குழு ஒன்றின் உதவி பெறப்பட்டதாக பொலிஸ் பரிசோதகர் அசேல பண்டார விஜேகோன் தெரிவித்துள்ளார்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!