தெஹிவளையில் இளைஞன் ஒருவருக்கு நேர்ந்த கதி

தெஹிவளை ஓபன் பிளேஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் நேற்று இரவு நபர் ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர் முப்பது வயது மதிக்கத்தக்கவர்
காயமடைந்தவர் பணி முடிந்து வீட்டுக்கு வந்து வீட்டின் முன் வீதியில் நின்றிருந்த போது மோட்டார் சைக்கிளில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.
வேறு யாரையாவது குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
(Visited 13 times, 1 visits today)