இலங்கை

இலங்கையில் பிறந்து 5 நாட்களேயான சிசுவை கைவிட்டுச்சென்ற தாய்க்கு நேர்ந்த கதி

கண்டி – எல்கடுவ வத்தேகம பிரதேசத்தில் சிசுவொன்றை கைவிடப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான பெண் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மே 4 ஆம் திகதி புத்தர் சிலையொன்றுக்கு அருகில், பிறந்து 5 நாட்களேயான சிசு கைவிடப்பட்டு சென்றுள்ளது.

இரண்டு பெண்களால் குறித்த இடத்திலிருந்து குழந்தையை கண்டெடுக்கப்பட்டது. குழந்தை தற்போது கண்டி தேசிய வைத்தியசாலையில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குழந்தையின் தாய் தெல்தெனிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும், குழந்தையின் தேவை கருதி அவரும் கண்டி தேசிய வைத்தியசாலையில் சிறைச்சாலை அதிகாரிகளின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

பிறந்து 5 நாட்களேயான சிசுவை கைவிட்டு சென்ற குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பெயரின் அதனது தாய் வத்தேகம காவல்துறையால் கடந்த 5 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

குறித்த பெண், மாத்தளை – கரகஹஹின்ன பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரென தெரியவந்துள்ளது.

குறித்த பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​அவர் தனது வீட்டில் குழந்தையைப் பெற்றெடுத்து விட்டு, மாத்தளை பகுதிக்கு சென்ற பாரவூர்தியில் அவ்விடத்துக்கு வந்து குழந்தையை கைவிட்டுச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

(Visited 4 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்