வட அமெரிக்கா

அமெரிக்காவில் பர்கர் சாப்பிட்ட 75 பேருக்கு நேர்ந்த கதி

அமெரிக்காவில் பர்கரைச் சாப்பிட்ட 75 பேர் நோய்வாய்ப்பட்டுள்ள நிலையில், 22 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

McDonald’s உணவகத்தின் Quarter Pounder பர்கரைச் சாப்பிட்டவர்களுக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டோர் பெரும்பாலோர் அமெரிக்காவின் மேற்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களாகும்.

கொலாராடோவை சேர்ந்த ஒருவர் உயிரழந்துள்ளார். Quarter Pounder பர்கரில் மாட்டிறைச்சி அல்லது வெங்காயத் துண்டுகளில் E. coli பாக்டீரியா இருந்ததாக நம்பப்படுகிறது.

குறிப்பாக எதில் பாக்டீரியா இருந்தது என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. தற்போதைக்கு 13 மாநிலங்களிலுள்ள McDonald’s கிளைகளில் Quarter Pounder பர்கரின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.

கிளைகளுக்கு வெங்காயத் துண்டுகளை விநியோகிக்கும் Taylor Farms நிறுவனம் அதன் வெங்காயங்களை மீட்டுக்கொண்டது.

பாதிக்கப்பட்ட McDonald’s வாடிக்கையாளர்கள், வயிற்றுப்போக்கு, வாந்தி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை நாடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!