செய்தி விளையாட்டு

அதிவேகமாக 300 விக்கெட்கள் வீழ்த்தி சாதனை படைத்த வீரர்

தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ககிஸோ ரபாடா டெஸ்டில் அதிவேகமாக 300 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனை படைத்தார்.

வங்காளதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ககிஸோ ரபாடா (Kasigo Rabada) 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை அவர் எட்டினார்.

இதற்கு முன்பு டெல் ஸ்டெய்ன் (439), ஷான் பொல்லாக் (421), மஹாயா நிதினி (390), ஆலன் டொனால்டு (330) மற்றும் மோர்னே மோர்க்கல் (309) ஆகிய தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் 300 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியிருந்தனர்.

அத்துடன் ரபாடா இமாலய சாதனை ஒன்றையும் செய்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 300 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்ற வாக்கர் யூனிஸின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

வாக்கர் யூனிஸ் (Waqar Younis) 12,602 பந்துகள் வீசி 300 விக்கெட்டுகள் கைப்பற்றிய நிலையில், ரபாடா 11,817 பந்துகளில் இந்த சாதனையை செய்துள்ளார்.

ஆனால் இருவருமே தமது 65வது டெஸ்டில் இந்த சாதனையை நிகழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

டெஸ்டில் இமாலய சாதனை நிகழ்த்திய ரபாடாவுக்கு கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

(Visited 41 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி