இந்தியா

சீமான் மீது பிரபல நடிகை கொடுத்த புகார் : கீழ்பாக்கம் மருத்துவமனையில் பரிசோதனை!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாலியல் முறைப்பாடு அளித்துள்ளார்.  இது குறித்து மகளிர் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பில் விஜயலெட்சுமி அளித்துள்ள பேட்டியில்,  7 முறை கருக்கலைப்பு செய்யப்பட்டதாக குற்றம் சாட்டி இருந்தார். இது தொடர்பாக பொலிஸ் விசாரணையிலும் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அத்துடன் திருவள்ளுர் நீதிமன்றத்திலும் முன்னிலையாகி வாக்குமூலம் அளித்திருந்தார்.

இதன் அடிப்படையில் சீமானுக்கு எதிரான முறைப்பாடு மீது பொலிஸார் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

இதன்படி  விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்த பொலிஸார் முடிவு செய்திருந்தனர். இதற்கமைய கீழ்ப்பாக்கத்தில் அமைந்துள்ள அரசு வைத்தியசாலையில், மருத்துவ பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பரிசோதனை முடிவுகள் வெளியாகிய பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(Visited 9 times, 1 visits today)

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!