இலங்கை

திருமலையில் கடற்கரை மற்றும் பவளப்பாறைகளை சுத்திகரிக்கும் நிகழ்வு

திருகோணமலை நகரை அன்மித்த கடற்கரை மற்றும் பவளப்பாறைகளை சுத்திகரிக்கும் நிகழ்வு கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தினால் இன்று (24) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக சுற்றுலா பணியகத்தின் தலைவர் ஏ.பீ. மதன் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாணத்தில் நகர சுத்திகரிப்பு மாத்திரமல்லாது கடற்கரை மற்றும் கடற்கரையை அண்டிய பிரதேசங்கள் அனைத்து இடங்களிலும் சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் இன்றைய தினம் திருகோணமலை டைக் வீதியில் அமைந்துள்ள கடற்கரை மற்றும் கடலுக்குள் கற்பாறைகளில் படிந்து காணப்படுகின்ற வலைகள், பிளாஸ்டிக் பொருட்களை அகற்றுகின்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

இச்சிரமதான பணியில் கிழக்கு மாகாண சுற்றுலா பணியகம், திருகோணமலை மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம், சுழியோடிகள் அமைப்பு அனைவரும் கூட்டாக இணைந்து கடலுக்குள் சுத்திகரிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

(Visited 7 times, 1 visits today)
See also  ஸ்ரீ லங்கன் விமான சேவையின் பங்குகள் தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி தீர்மானம்
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content