இலங்கை

இலங்கை: பேருந்தை செலுத்திக்கொண்டிருந்தே போதே உயிரிழந்த சாரதி!

நுவரெலியாவிலிருந்து பத்தனை – கெட்டபுலா ஊடாக நாவலப்பிட்டி நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தை செலுத்திய சாரதி ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

பேருந்தை செலுத்திய போது சாரதி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து குறித்த பேருந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

சாரதி கம்பளைப் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் எனபொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நுவரெலியாவிலிருந்து பத்தனை ஊடாக நேற்று மாலை பயணித்த குறித்த பேருந்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதன்போது குறித்த பேருந்தில் பயணித்த பயணிகள் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான மற்றுமொரு பேருந்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து பேருந்தின் சாரதியும் நடத்துநரும் இணைந்து தொழில்நுட்பக் கோளாறை நிவர்த்தி செய்து பின்னர் பேருந்தை மீண்டும் நாவலப்பிட்டி நோக்கிச் செலுத்தியுள்ளனர்.

இதன்போது லிந்துலை – பாமஸ்டன் பகுதியில் பேருந்தின் சாரதிக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்ட நிலையில் சாரதி இருக்கையிலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்தே குறித்த பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் லிந்துலை காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!