இலங்கை

தேசிய மக்கள் சக்தியின் வீழ்ச்சி ஆரம்பம் – அரசாங்கத்திற்கு சவால் விடுத்த எம்.பி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வீழ்ச்சிப் பயணம் ஆரம்பித்துவிட்டதாகவும், கூட்டுறவு சங்க தேர்தல் முடிவுகள் இதனை உறுதிப்படுத்துவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (10) நடைபெற்ற வரவு – செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“ மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு ஆளுங்கட்சிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுவருகின்றது. எனினும், தேர்தல் நடத்தப்படுமா என்பது சந்தேகமே.

ஏனெனில் அரசாங்கத்தின் வீழச்;சி ஆரம்பமாகியுள்ளது. கூட்டுறவு சங்க தேர்தல் முடிவுகள் இதனை வெளிப்படுத்துகின்றன. அத்தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வி அடைந்துவருகின்றது.

முடிந்தால் மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு சவால் விடுக்கின்றோம். அவ்வாறு நடத்தினால் அரசாங்கம் தொடர்பில் மக்கள் மத்தியில் உள்ள நிலைப்பாடு சிறப்பாக தெரியவரும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டார்

(Visited 1 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!