இலங்கை செய்தி

வீட்டின் கூரையில் இருந்து மீட்கப்பட்ட சடலம்

தனது வீட்டின் மேற்கூரை ஓடுகளை தயார் செய்வதற்காக ஏறிய நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பாணந்துறை பின்வத்த பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

இறந்தவர் நீண்ட நேரமாகியும் கூரையில் இருந்து கீழே வராததால், அப்பகுதியினர் தேடியபோது இறந்து கிடந்ததை கண்டனர்.

இதையடுத்து அவரது மகன் கூரையின் மீது ஏறி தேடியபோது, ​​தந்தை இறந்து கிடந்தது தெரியவந்த நிலையில், இது குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால், வீட்டின் பல பகுதிகள் ஈரமாக இருந்ததால், மேற்கூரையில் ஏறி சரி செய்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

சம்பவம் தொடர்பில் பின்வத்தை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!