இலங்கை

இலங்கையில் பொலிஸாருக்கு குழப்பத்தை ஏற்படுத்திய சடலம்

கெக்கிராவ ஒலுகரந்த பிரதேசத்தில் உள்ள வர்த்தக கட்டிடம் ஒன்றின் கொங்கிறீட் கூரையில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கெக்கிராவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நெத் நியூஸ் செய்தியாளர் தெரிவித்தார்.

சிறிது நேரம் கட்டிடம் மூடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

கட்டிடத்தில் சடலம் கண்டெடுக்கப்பட்ட வேளையில் இருந்த நிலவரப்படி, குறித்த நபர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

உயிரிழந்தவர் கெக்கிராவ ஒலுகரந்த பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதுடைய திருமணமானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலும் சில நாட்களாக அவர் தனது வீட்டில் இருந்து காணாமல் போனது தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கெக்கிராவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 71 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!