இலங்கை செய்தி

யாழ்ப்பாணத்தில் சிறுமியை வேலைக்கு அமர்த்திய பெற்றோருக்கு ஏற்பட்டுள்ள நிலை

உணவு பொருள் விற்பனையில் 13 வயது சிறுமியை ஈடுபடுத்திய பெற்றோரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு யாழ்ப்பாண பொலிஸாருக்கு யாழ்.நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

கிளிநொச்சி திருமுருகண்டி பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் யாழ்,நகர் பகுதியில் விற்பனை செய்த உணவு பொருட்கள் காலாவதியாகியவை என தெரியவந்த நிலையில், யாழ்ப்பாண பொலிஸாரினால் சிறுமி கைது செய்யப்பட்டார்.

சிறுமியிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், திருமுருகண்டி பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்து தினமும், உணவு பொருட்களுடன் பிற்பகல் 1.30 மணியளவில் பேருந்து ஏறி யாழ்ப்பாணம் வந்து, அவற்றை விற்பனை செய்து விட்டு, மீண்டும் இரவு 08 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து பேருந்தில் வீட்டுக்கு செல்வதாக கூறியுள்ளார்.

இது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாரினால் யாழ்.நீதவான் நீதிமன்றின் கவனத்திற்கு செல்லப்பட்ட நிலையில், 13 வயது சிறுமியை தனியாக வேலைக்கு அமர்த்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் பெற்றோர்களை கைது செய்து மன்றில் முற்படுத்துமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!