இலங்கை

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் பணத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது, ​​செப்டெம்பர் மாதத்தில் வெளிநாட்டு ஊழியர்கள் நாட்டிற்கு அனுப்பும்  தொகை சற்று குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

ஓகஸ்ட் மாதத்தில் பதிவாகியிருந்த 577 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில், செப்டெம்பர் மாதத்தில் பெறப்பட்ட பணம் 556 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

இருப்பினும், செப்டம்பர் 2023 உடன் ஒப்பிடுகையில், 2024 செப்டம்பரில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு பணம் அனுப்புவதில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வருடம் மார்ச் முதல் செப்டெம்பர் வரை தொடர்ச்சியாக வெளிநாட்டு ஊழியர்களின் மாதாந்தப் பணம் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, கடந்த மாதம் செப்டெம்பர் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருமானம் 181 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

இதன்படி, இவ்வருடம் ஜனவரி முதல் செப்டெம்பர் வரையான காலப்பகுதியில் சுற்றுலாத்துறை மூலம் கிடைத்த வருமானம் 2,348 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

(Visited 55 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்