வட அமெரிக்கா

நாய் ஒன்றை சுட்டுக் கொன்ற கனடிய பொலிஸார்… வெளியான காரணம்

கனடாவில், பொதுமக்களை கடித்து தாக்கிய நாய் ஒன்றை பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளனர். ஹால்டன் பிராந்தியத்தின் புர்லிங்டன் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மூன்று பேரை கடித்த நாய் ஒன்றை சுட்டுக் கொன்றதாக ஹால்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.நாய் கடிக்கு இலக்கான இருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

படுகாயமடைந்த இருவருக்கும் உயிர் ஆபத்து கிடையாது என வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிர் ஆபத்து இன்றி நாயை கட்டுப்படுத்த எடுத்த முயற்சிகள் தோல்வியடையவும், துப்பாக்கிச் சூடு நடத்த நேரிட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த நாய் என்ன வகையைச் சேர்ந்தது என்பது பற்றியோ உரிமையாளர்கள் பற்றியோ பொலிஸார் தகவல்களை வெளியிடவில்லை.

(Visited 6 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்