இலங்கை செய்தி

“தரம் 6” கல்வி மறுசீரமைப்பு ஒத்திவைப்பு! பின்னணி என்ன?

தரம் 6 இற்குரிய கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கையை ஒத்திவைப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

உரிய மீளாய்வுகளின் பின்னர் 2027 ஆம் ஆண்டு முதல் இதற்குரிய நடவடிக்கையை முன்னெடுப்பதற்கும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (13) நடைபெற்றது.

இதன்போதே அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ மேற்படி தகவலை வெளியிட்டார்.

எனினும், தரம் 1 இற்குரிய கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கை திட்டமிட்ட அடிப்படையில் நடைபெறும் எனவும் அமைச்சர் கூறினார்.

“ தரம் 6 இற்குரிய கல்வி மறுசீரமைப்பில் ஆங்கில பாட திட்டம் தொடர்பில் சமூகத்தில் சர்ச்சை எழுந்துள்ளது. சிலர் இதனை அரசியலாக்கியுள்ளனர்.

எனவே, கல்வி போன்ற விடயங்களில் நம்பிக்கையீனத்துடன் பயணிக்க முடியாது.
விசாரணைக்குழுக்கள் அமைக்கப்பட்டன.

ஆலொசனைகள் பெறப்பட்டன. அந்தவகையில் தரம் 6 இற்குரிய கல்வி மறுசீரமைப்பு தற்காலிகமாக பிற்போடப்படுகின்றது.” – எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அதேவேளை கல்வி மறுசீரமைப்பை கைவிடுமாறு வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!