ஆசியா

பங்களாதேஷில் காவல் நிலையத்தில் அரங்கேறிய கொடூரம் : 15 வயது சிறுவன் படுகொலை!

சமூக ஊடகங்களில் முகமது நபி பற்றி “ஆட்சேபகரமான கருத்துக்களை” தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்ட 15 வயது இந்து சிறுவன் வங்காளதேசத்தில் உள்ள காவல் நிலையத்திற்குள் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

வங்கதேசத்தின் குல்னா நகரில் கல்லூரி மாணவர் உத்சவ் மண்டோல் என்ற சிறுவனே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் அவதூறாகக் கருதப்படும் ஒரு அறிக்கையை அவர் பதிவு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தடயவியல் ஆதாரம் இல்லாமல் அவர் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்ட நிலையில், இனம்தெரியாத கும்பல் ஒன்று அவரை கொலை செய்துள்ளது.

குறித்த சம்பவம் இடம்பெற்றபோது காவல் நிலையத்தில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரும் கடமையில் இருந்ததாக கூறப்படுகிறது.

பங்களாதேஷின் சட்ட அமலாக்க முகவர்களும் இந்த வழக்கில் குற்றவாளிகளாகக் கருதப்படலாம், ஏனெனில் மிருகத்தனமான குற்றம் அவர்களின் கண்காணிப்பில் நடப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!