ஆசியா

சிங்கப்பூரில் 4 வயது மகனுக்கு தந்தை செய்த கொடூரம்

சிங்கப்பூரில் 4 வயதுச் சிறுவனை கொலை செய்த தந்தைக்கு 8 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மகனுக்கு ஒழுக்கத்தைச் சொல்லிக்கொடுக்க எண்ணிய தந்தை மிளகாயின் நுனியைச் சிறுவனின் வாயில் திணித்தார்.

அது சிறுவனின் சுவாசக்குழாயில் சிக்கியதால் சிறுவன் மூச்சுத்திணறி உயிரிழந்தார். 38 வயதுடைய அந்தத் தந்தை, தம்முடைய மனைவி, 4 பிள்ளைகளுடன் ஒரே வீட்டில் வசித்தார்.

2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் திகதி சம்பவம் நடந்தது. சிறுவனின் மேல் துர்நாற்றம் வருவதைக் கண்ட தந்தை, அதைப் பற்றிக் கேட்டப்போது சிறுவன் மலம் கழித்ததை மறுத்துள்ளார்.

பொய் சொன்ன மகனுக்கு ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்க நினைத்த தந்தை மிளகாயைப் பையனின் வாயில் திணித்துள்ளார்.

தொடர்ந்து மிளகாயைச் சாப்பிடும்படி அவர் சிறுவனைக் கட்டாயப்படுத்தினார். சிறிது நேரத்திற்குப் பிறகு, சிறுவன் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்துள்ளார்.

அருகே இருந்த மருந்தகத்திற்குத் தந்தை தன் மகனை அழைத்துச் சென்றார். சிறுவன் மரணம் அடைந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதிசெய்தனர்.

(Visited 23 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்