இலங்கை

முல்லைத்தீவு பட்டத்திருவிழாவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சிறுவன்!

முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியினை சேர்ந்த பாடசாலை மாணவன் ஒருவர் முல்லைத்தீவு பொலிஸாரினால் இன்றையதினம் (29.01) அவரது வீட்டில் வைத்து தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

வல்வெட்டித்துறையில் வருடாவருடம் பட்டத்திருவிழா மேற்கொள்ளுபவர்களால் ஒழுங்கமைக்கப்பட்டு முல்லைத்தீவு கடற்கரையில் நேற்றையதினம் (28.01) பட்டத்திருவிழா ஆரம்பிக்கும் நிகழ்வாக இடம்பெற்றிருந்தது.

அதில் வித்தியாசமான வடிவில் பட்டங்களை உருவாக்கி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டம் ஏற்றி மகிழ்ந்திருந்தனர்.

குறித்த பட்ட திருவிழாவில் முல்லைத்தீவினை சேர்ந்த பாடசாலை மாணவன் ஒருவர் பட்டத்தில் தமிழீழ வரைபடம் போன்ற அமைப்பில் உருவாக்கப்பட்ட பட்டத்தினை ஏற்றியுள்ளார்.

இதனை அவதானித்ததாக கூறி முல்லைத்தீவு பொலிஸார் அவ் இடத்திற்கு சென்று குறித்த சிறுவனை விசாரணைக்கு உட்படுத்தியிருந்த நிலையில் குறித்த சிறுவனது வீட்டிற்கு இன்றைய தினம் பொலிஸார் மற்றும் புலனாய்வு துறையினர் சென்று விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

முல்லைத்தீவு கள்ளப்பாடு தெற்கு பகுதியை சேர்ந்த 15 வயதுடைய குறித்த சிறுவனே சம்பவம் தொடர்பில் பாெலிஸாரினால் கடுமையான விசாரணைக்குட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது

(Visited 8 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்