இந்தியா

தன் பாட்டியை மனைவி என அழைத்த சிறுவன் ; அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் 8 வயது சிறுவன் மறுபிறவி எடுத்ததாக கூறி குடும்பத்தினரை திகைப்பில் ஆழ்த்தினார்.

உத்தர பிரதேச மாநிலம் மைன்புரி ஜாகிரின் ரத்தன்பூரைச் சேர்ந்தவர் ரஞ்சனா. இவரது 8 வயது மகன் ஆர்யன். இவர் தன்னை 2015ஆம் ஆண்டு இறந்த தனது தாத்தாவின் மறுபிறவி என்று கூறினார்.தனது 4 வயதில் முதல் முறையாக தாய் ரஞ்சனாவிடம் நீ என் அம்மா அல்ல என்று கூறியுள்ளார். மாறாக அவரை தனது மகள் என்று தெரிவித்து ஆச்சரியமளித்தார்.

ஒருநாள் மைன்புரிக்கு சென்ற ஆர்யன், அங்கு தனது பாட்டியை பெயர் சொல்லி கூப்பிட்டதுடன், அவரது பாதங்களை தொட்டு வணங்குமாறு ரஞ்சனா கூறியபோது கோபப்பட்டுள்ளார். மேலும் பாட்டியை மனைவி என்று கூறிய ஆர்யன், அம்மாவை மகள் என்றும், அண்ணனை தன் மகன் என்றும் அழைத்துள்ளார்.

கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் பாம்பு கடித்ததால் சிறுவனின் தாத்தா மனோஜ் மிஸ்ரா உயிரிழந்துள்ளார். அந்த சமயம் கர்ப்பமாக இருந்த ரஞ்சனா, தனது தந்தை இறந்த 20 நாட்களில் ஆர்யனை பெற்றெடுத்தார்.சிறுவன் உறவுமுறைகளை மாற்றி அழைப்பதுடன், தன் தாத்தாவின் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட பணம் குறித்து கூறியபோது அங்குள்ள மக்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.

(Visited 7 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content