இலங்கை

இலங்கைக்கு காத்திருக்கும் மிகப் பெரிய ஆபத்து! எதிர்காலம் குறித்த சிந்தனையில் மக்கள்!

எதிர்வரும் காலங்களில் இந்நாட்டின் சனத்தொகை கணிசமாகக் குறையலாம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூகக் கற்கைகள் பேராசிரியர் இந்திரலால் டி சில்வா கூறுகிறார்.

இலங்கையில் பிறப்பு வீதத்தில் 25 வீதம் குறைவடைந்துள்ளமை முக்கிய பிரச்சினைகளில் ஒன்று என சுட்டிக்காட்டிய அவர், தற்போது பிறப்பு வீதம் வேகமாக குறைந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

உதாரணமாக, 2013 இல் நம் நாட்டில் பிறந்தவர்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டுப் பார்த்தால், 2022 இல் பிறந்தவர்களின் எண்ணிக்கை உண்மையில் 90,000 குறைந்துள்ளது.

வேறுவிதமாகக் கூறினால், 2013 ஆம் ஆண்டின் பிறப்பு விகிதத்துடன் ஒப்பிட்டு பார்க்கையில் 2022 ஆம் ஆண்டில் பிறந்தவர்களின் எண்ணிக்கை 25 வீதத்தால் குறைந்துள்ளது என அவர் விளக்கியுள்ளார்.

அதேநேரம் இளம் சமூகம் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வது உட்பட பல காரணிகளால் எதிர்வரும் காலங்களில் இலங்கையின் சனத்தொகை குறையலாம் எனவும் பேராசிரியர் வலியுறுத்தியுள்ளார்.

(Visited 2 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content