ஐரோப்பா

பிரித்தானியாவின் மிகப் பெரிய கல்விக்கூடத்தில் அமுலாகும் தடை

பிரித்தானியாவின் மிகப் பெரிய கல்விக்கூடங்களில் ஒன்றான ஆர்மிஸ்டனின் நிர்வாகம் பாடசாலை நேரங்களில் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள 42 அரச பாடசாலைகளில் சுமார் 35,000 மாணவர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என்று ஆர்மிஸ்டன் அகாடமி தெரிவித்துள்ளது.

ஸ்மார்ட்போன்கள் மாணவர்களின் கற்றல் மற்றும் நல்வாழ்வை சீர்குலைப்பதாகவும், அவர்களின் மன ஆரோக்கியத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் Ormiston இன் தலைமை நிர்வாகி டாம் ரீஸ் கார்டியனிடம் தெரிவித்தார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், முந்தைய பழமைவாத அரசாங்கத்தின் கீழ், இங்கிலாந்தின் கல்வித் துறை, நாட்டின் பாடசாலைகளில் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துவது குறித்த அறிவுறுத்தல்களை புதுப்பித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

(Visited 20 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்