இலங்கை

60 மருந்துகளுக்கு மாத்திரம் தான் கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

நோயாளிகளின் சிகிச்சைக்காக சுமார் 1000 அத்தியாவசிய மருந்துகள் உள்ள நிலையில்,  அவற்றில் 60 மருந்துகளுக்கு மாத்திரமே விலை கட்டுப்பாடு உள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனால் கடந்த காலங்களில் மருந்துகளின் விலை மக்களால் வாங்க முடியாத அளவுக்கு அதிகரித்ததாக அந்த சங்கத்தின் செயலாளர் மருத்துவா் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

தற்போது டொலரின் பெறுமதி குறிப்பிட்ட மட்டத்திற்கு குறைந்துள்ளதால் அதன் பலன் நிச்சயமாக மக்களுக்குச் சென்று சேர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதனை வழங்குவதற்கு உரிய முறைமையை சுகாதார அமைச்சு தயாரிக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மருந்து இறக்குமதியாளர்கள் தமக்கு விரும்பியவாறு மருந்துகளின் விலையை உயர்த்துவதால்,  அது தொடர்பில் அரசாங்கம் தலையிட வேண்டுமெனவும் மருத்துவா் ஹரித அலுத்கே குறிப்பிட்டுள்ளாா்.

(Visited 10 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content