மின் கட்டண மீளாய்வு குறித்து அமைச்சரவை வெளியிட்ட அறிவிப்பு!
மின்சார கட்டண மீளாய்வு காலத்தை 03 மாதங்களாக குறைப்பதற்கு மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
முன்பு 06 மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் மறுஆய்வு செய்யப்பட்டது.
பொது மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை கருத்திற் கொண்டு உரிய கால அவகாசம் 03 மாதங்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்காலத்தில் 03 மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டண மீளாய்வு மேற்கொள்ளப்படும்.
(Visited 11 times, 1 visits today)





