ஆசியா ஐரோப்பா

68வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சாகசப்பிரியர்..!

68வது மாடியில் இருந்து பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நபர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இவர் உயரமான கட்டடங்களில் சுவர் வழியாக ஏறி சாகசம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 வயதான ரெமி லுசிடி என்னும் அவர் சீனாவில் உள்ள ஹாங்காங்கில் ஒரு அடுக்குமாடியில் ஏறியபோது தவறி விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

68 ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து நபர் உயிரிழப்பு | Person Dies After Falling From 68Th Floor

தனது நண்பரை காண வந்ததாகக் கூறி அவர் அந்த அடுக்குமாடிக்குள் நுழைந்திருக்கிறார். 68 ஆவது மாடியை அடைந்தபோது கதவைத் தட்டி அங்கிருந்த பணிப் பெண்ணிடம் உதவி கோரியுள்ளார்.

ஆனால் அந்த பெண்ணோ அச்சத்தில் உதவ மறுத்து காவல் நிலையத்தைத் தொடர்புகொண்டார்.அதற்குள் ரெமி லுசிடி கால் தவறி கீழே விழுந்து மரணம் அடைந்ததாக தெரிகிறது.

(Visited 12 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!