ஆசியா

தாய்லாந்தில் பச்சையாக இறைச்சியை உட்கொண்டவர்களால் ஏற்பட்டுள்ள பாதிப்பு – அவசரநிலை அறிவிப்பு!

தாய்லாந்து, பச்சையாக பன்றி இறைச்சியை உண்பதாலோ அல்லது கையாளுவதாலோ ஆந்த்ராக்ஸ் எனப்படும் தொற்று ஏற்படுவதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இதனையடுத்து அங்கு சுகாதார அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முக்தஹான் மாகாணத்தில் உள்ள பொது சுகாதார அதிகாரிகள் இதுவரை மூன்று உறுதிப்படுத்தப்பட்ட ஆந்த்ராக்ஸ் நோயாளிகளை அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோயாளிகளில் ஒருவர் இறந்துவிட்ட நிலையில், மற்ற இருவர் உள்ளூர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிராந்தியம் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் 636 பேர் பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பு கொண்டிருந்ததாக கண்டறியப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர்களில் 538 பேர் தோல் மற்றும் இரைப்பைக் குழாயைப் பாதிக்கும் அறிகுறிகளுக்கான கட்டாய வார கண்காணிப்பை முடித்துள்ளனர். மீதமுள்ள 98 பேர் கண்காணிப்பில் உள்ளனர் மற்றும் டாக்ஸிசைக்ளின் தடுப்பு மருந்தைப் பெறுகின்றனர்.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!