ஆசியா

பாகிஸ்தானில் பொலிஸாரின் டிரக் மீது பயங்கரவாத தாக்குதல் : 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலி!

பொலிஸாரை ஏற்றிச் சென்ற டிரக் அருகிலான பயங்கரவாத தாக்குதலில் 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்ததுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தானில் நாடு முழுவதும் பயங்கரவாதிகளால் துப்பாக்கிச் சூடு சம்பவங்களும், தற்கொலை படை தாக்குதல்களும் நடைபெறுகின்றன.

இந்நிலையில், பாகிஸ்தானின் பஜவுர் (Bajaur) மாவட்டத்தின் மெஹ்முந்த் பகுதியில், நடைபெறவிருந்த போலியோ நோய் தடுப்புக்கான தடுப்பூசி செலுத்தும் முகாமுக்கு சுமார் 25 பொலிஸாருடன் சென்ற டிரக் ஒன்றின் அருகே சக்தி வாய்ந்த குண்டு வெடித்துள்ளது.

இந்த பயங்கரவாத தாக்குதலில் சுமார் 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்தனர்; 20 பேர் காயமடைந்தனர்.காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் பஜவுர் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 2 பேர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இத்தாக்குதலால் அப்பகுதியில் நடைபெறவிருந்த போலியோ தடுப்பூசி முகாம் இரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 2 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content