ஐரோப்பா

ஸ்பெயின் விமான நிலையத்தில் நள்ளிரவில் நிகழ்ந்த பயங்கரம் – 18 பேர் காயம்!

ஸ்பெயினின் மஜோர்காவின் பால்மா டி மல்லோர்கா விமான நிலையத்தில்   ரியானேர் விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 18 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சனிக்கிழமை அதிகாலை 12:35 மணியளவில் விமானம் புறப்படத் தயாராகி வந்ததாகக் கூறப்படுகிறது. விமானத்தின் இலக்கு இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

பயணிகள் அவசரகால வெளியேற்றம் வழியாக விமானத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.

. பிராந்திய அவசர ஒருங்கிணைப்பு மையத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், விமான நிலையத்தை தளமாகக் கொண்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் சிவில் காவல்படை உறுப்பினர்களுடன் நான்கு ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன.

“பதினெட்டு பேர் காயமடைந்து மருத்துவ உதவி பெற்றனர், அவர்களில் ஆறு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்,” எனத் தெரிவித்துள்ளார்.

தீ விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

 

(Visited 1 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
Skip to content