இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து -ஒருவர் பலி, மூவர் படுகாயம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொட்டாவ மற்றும் கஹதுடுவ ஆகிய இடங்களுக்கு இடையிலான 1 கட்டைக்கு அருகில் இன்று (26) அதிகாலை பயங்கர விபத்து இடம்பெற்றுள்ளது.

சிறிய லொறி ஒன்று முன்னால் சென்ற லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், சிறிய லொறியின் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.விபத்தில் படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஆபத்தான நிலையில் இருந்த சாரதியே உயிரிழந்துள்ளார்.

ரத்கமவில் இருந்து பேலியகொட மீன் சந்தையில் மீன் கொள்வனவு செய்யச் சென்ற 3 பேரை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று ஹம்பாந்தோட்டையில் இருந்து குருநாகல் நோக்கி சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியின் பின்பகுதியில் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தை அடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த கலனிகம போக்குவரத்து பிரிவு, தீயணைப்பு மற்றும் உயிர் காக்கும் பிரிவின் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் 20 நிமிட நடவடிக்கைக்கு பின் இயந்திர உபகரணங்களை பயன்படுத்தி 3 பேரையும் மீட்டுள்ளனர்.

சிறிய ரக லொறியின் சாரதி தூங்கியமையே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.விபத்தில் சிறிய ரக லொறி பலத்த சேதமடைந்துள்ளதுடன், ரத்கம பகுதியைச் சேர்ந்த கமல் சொய்சா என்ற 55 வயதுடைய நபரே விபத்தில் உயிரிழந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

(Visited 12 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!