டெல்லியில் வெப்பநிலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் வெப்பநிலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
அந்நகரில் இன்று (29) 49.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், தண்ணீர் பற்றாக்குறை குறித்து மாநில அதிகாரிகளும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
30 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட டெல்லி மக்களுக்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள வெப்ப அலைகள் உக்கிரமடைந்துள்ளமையே இந்த நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாகவும் வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
(Visited 24 times, 1 visits today)