இலங்கை

இலங்கையில் வெவ்வேறு சாலை விபத்துகளில் இளம்பெண் பலி மற்றும் நான்கு குழந்தைகள் படுகாயம்!

இன்று காலை 06.00 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் 19 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளதுடன் நான்கு சிறுவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமேல் மாகாணம் கும்பகெட்ட பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற விபத்தில் 19 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கும்பக்வெவ பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மற்றும் இரண்டு சிறுவர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹிரிபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கும்பகெட்டே பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலும், ருவன்வெல்ல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற விபத்தில் 10 மற்றும் 04 வயதுடைய இரண்டு சிறுவர்கள் காயமடைந்துள்ளதுடன் அவர்களின் 37 வயதுடைய தாயும் உயிரிழந்துள்ளார்.

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் பெண் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

See also  இலங்கையில் பயங்கரவாத அச்சுறுத்தல்! மட்டக்களப்பு சீயோன் தேவாலய பகுதியில் இருவர் கைது

மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளதுடன், அவரது 10 வயது குழந்தை கரவனெல்ல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், 04 வயது குழந்தை சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளது.

(Visited 2 times, 2 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content