இலங்கை

இலங்கை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொழிற்சங்க போராட்டம் நாளையும் தொடரும்! வெளியான அறிவிப்பு

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க போராட்டம் நாளையும் தொடரும் என இலங்கை ஆசிரியர் சங்கம் (CTU) அறிவித்துள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்,

அனைத்து ஆசிரியர்களும் அதிபர்களும் சுகயீன விடுமுறையை அறிவித்து வியாழன் (ஜூன் 27) அன்று பணிக்கு வருவதைத் தவிர்ப்பார்கள் என தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று CTU தொழிற்சங்க உறுப்பினர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜோசப் ஸ்டாலின் மேலும் தெரிவித்தார்.

சம்பள முரண்பாடுகள் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சுகயீன விடுமுறையை அறிவித்து கடமையிலிருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளனர்.

அதே சமயம், CTU தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள், கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு லோட்டஸ் வீதி வரை ஆர்ப்பாட்ட பேரணியை முன்னெடுத்தனர். இதனைத் தொடர்ந்து, போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்துள்ளனர்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!