பிரதமருக்கு கை கொடுக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகள்!
கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு Harini Amarasooriya எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்காதிருக்க தமிழ்த் தேசியக் கட்சிகள் தீர்மானித்துள்ளன.
மேற்படி பிரேரணைக்கு தமது கட்சி ஆதரவளிக்காது என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழு தலைவர் எஸ்.சிறீதரன் S. Sritharan தெரிவித்தார்.
“தற்போதைய அரசியல் சூழலில் இந்தப் பிரேரணை ஒரு கொள்கைச் சண்டையாக விட, அரசியல் அழுத்தத்தை உருவாக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகின்றது.” – எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் ஆதரவளிக்காது என தெரியவருகின்றது.
“ கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக எதிர்க்கட்சியால் தற்போது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் அவதூறு பிரசாரங்களை ஏற்க முடியாது.” – என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதமர் நேற்று முன்தினம் சந்திப்பு நடத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





