இலங்கை செய்தி

இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை வலியுறுத்தும் தமிழரசு கட்சியினர்!

அண்மையில் திருகோணமலையில் இடம்பெற்ற சம்பவத்தை சுட்டிக்காட்டி இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை உறுதி செய்வதன் அவசியத்தை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்காவிடம் தமிழரசு கட்சியின்  நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுத்துரைத்துள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற விசேட சந்திப்பில் அவர்கள் இதனை வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது மாகாண சபைத் தேர்தல்கள், வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்தும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.

தமிழரசு கட்சியினர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளின் பேரில் இந்த சிறப்பு சந்திப்பு இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.

(Visited 5 times, 5 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!