ஆசியா

சிங்கப்பூரில் விளையாடிக்கொண்டிருந்த தமிழ் இளைஞன் திடீர் மரணம் – அதிர்ச்சியில் குடும்பத்தினர்

சிங்கப்பூரில் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

33 வயதான மணிமாறன் அசோக்குமார் என்பவருக்கு ஏற்பட்ட திடீர் மரணம் அனைவருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவன் விளையாட்டு மைதானத்தில் 15 பேருடன் அவர் விளையாடியதாகவும், அப்போது நிலை தவறி மயக்கநிலைக்கு சென்ற அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் கடந்த ஜூலை 29 ஆம் திகதி நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவரின் இந்த திடீர் மரணத்துக்கு மாரடைப்பு தான் காரணம் என தெரியவந்துள்ளது.

மணிமாறனுக்கு 2020 ஆம் ஆண்டு ஜனவரியில் திருமணம் நடந்தது, 4 மாதத்துக்கு முன் தான் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

அவர் பெற்றோர்கள் மற்றும் இரு சகோதரிகளுடனும் தெம்பனீஸ் பகுதியில் மகிழ்ச்சியாக வசித்து வந்துள்ளார். மணிமாறனின் திடீர் மரணம் அவரின் குடும்பத்திற்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

(Visited 8 times, 1 visits today)
See also  இஸ்ரேலில் நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஹமாஸ் அமைப்பு
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content