சீனாவின் அச்சுறுத்தல் தீவிரம் – பாதுகாப்பு செலவினங்களை அதிகரித்த தைவான்

சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில், தைவான் தனது இராணுவத்தை மறுசீரமைப்பு செய்வதால், நாட்டின் பாதுகாப்பு அதன் பொருளாதார உற்பத்தியில் 3% ஐ விட அதிகமாக இருக்கும் என்று தைவான் ஜனாதிபதி வில்லியம் லாய் சிங்-டே கூறுகிறார்.
இராணுவம் சமீபத்திய உபகரணங்களுடன் பொருத்தப்படும் என்றும், அவற்றில் பெரும்பாலானவை அமெரிக்காவிலிருந்து வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதிக சம்பளத்துடன் கூடிய கூடுதல் சேவைப் பணியாளர்களைத் தக்கவைத்துக் கொள்ளவும், கட்டாய தேசிய சேவையை நான்கு மாதங்களிலிருந்து ஒரு வருடமாக நீட்டிக்கவும் இராணுவம் நிதியுதவி கோருவதாகவும் கூறப்படுகிறது.
கடந்த வியாழக்கிழமை அமெரிக்க வர்த்தக சபையில் ஆற்றிய உரையில், ஜனாதிபதி லாய், பாதுகாப்பு பட்ஜெட் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% ஐ விட அதிகமாக இருப்பதை உறுதி செய்வதில் தனது நிர்வாகம் உறுதியாக இருப்பதாகக் கூறினார்.
அதே நேரத்தில், தேசிய பாதுகாப்பு திட்டத்தின் சீர்திருத்தம் தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தைவான் தனது சொந்த பாதுகாப்பிற்காக போதுமான அளவு செலவு செய்யவில்லை என்று கூறும் அமெரிக்காவிற்கும் உள்ளூர் விமர்சகர்களுக்கும் லாயின் கருத்துக்கள் சமீபத்திய உறுதிமொழியாகும்.
தனது அதிநவீன ஆயுதங்களுக்கு அமெரிக்காவையே நம்பியுள்ள தைவான், தற்போது தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 2.45%-ஐ ராணுவத்திற்காக செலவிடுகிறது.