சமூக ஊடகங்களால் ஆபத்தில் சிக்கும் பெண்கள் – எச்சரிக்கும் ஆய்வு!
சமூக ஊடகங்களில் இளைஞர்களை தற்கொலைக்கு தூண்டும் வகையிலான பதிவுகள், மற்றும் தீங்கு விளைவிக்கும் இடுகைகள் அதிகரித்துள்ளதாக ஆய்வொன்று கண்டறிந்துள்ளது. குறிப்பாக எக்ஸ் தளம் மற்றும் டிக்டொக் உள்ளிட்டவற்றில் பெண்களை பாதிக்கும் வகையிலான உள்ளடக்கங்கள் அதிகரித்திருப்பதாக அந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. சிறுவர்களை விட பெண்கள் கணிசமாக அதிக தீங்கு விளைவிக்கும் இடுகைகளை எதிர்கொள்வதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்கொலை தடுப்பு தொண்டு நிறுவனமான மோலி ரோஸ் அறக்கட்டளை 2000 இளைஞர்கள் மத்தியில் இது தொடர்பான கருத்து சேகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது. […]




