அரசியல் இலங்கை செய்தி

தலைநகரில் ஆட்டம் காண்கிறதா என்.பி.பி. ஆட்சி?

  • December 24, 2025
  • 0 Comments

கொழும்பில் தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்று அமைச்சர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஆளுகையின் கீழுள்ள கொழும்பு மாநகரசபையின் (Colombo Municipal Council) வரவு- செலவுத் திட்டம் தோல்வியடைந்துள்ளமை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “கொழும்பு மாநகரசபையின் (CMC) வரவு- செலவுத் திட்டம் தோல்வி அடைந்திருந்தாலும் நிர்வாக நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு எவ்வித […]

அரசியல் இலங்கை செய்தி

கொழும்பு மாநகர சபையில் என்.பி.பி.க்கு தோல்வி: அடுத்து என்ன?

  • December 23, 2025
  • 0 Comments

கொழும்பு மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டம் அடுத்த முறை நிச்சயம் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (23) நடைபெற்றது. இதன்போது கொழும்பு மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டமை தொடர்பில் கேள்விகள் எழுப்பட்டன. இவற்றுக்கு பதிலளித்த அமைச்சர் கூறியவை வருமாறு, கொழும்பு மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும் அதனை மீண்டும் முன்வைக்க […]

அரசியல் இலங்கை செய்தி

2026 ஆம் ஆண்டில் காத்திருக்கும் ஆபத்து: மொட்டு கட்சி எச்சரிக்கை!

  • December 23, 2025
  • 0 Comments

கொழும்பு மாநகரசபை ஊடாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு, மிக முக்கிய செய்தியொன்று வழங்கப்பட்டுள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது. தேசிய மக்கள் சக்தியின் ஆளுகையின்கீழுள்ள கொழும்பு மாநகரசபையின் பாதீடு நேற்று (22) தோற்கடிக்கப்பட்டது. இந்நிலையில் கொழும்பில் இன்று (23) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த கூறியவை வருமாறு, “ இலங்கையிலுள்ள உள்ளாட்சிசபைகளில் கொழும்பு மாநகரசபைதான் பிரதானமானது. அதில் ஏற்பட்டுள்ள பின்னடைவை அரசாங்கம் […]

அரசியல் இலங்கை செய்தி

கொழும்பில் இனி எங்கள் ஆட்சி: கூட்டு எதிரணி அறிவிப்பு

  • December 23, 2025
  • 0 Comments

“ கொழும்பு மாநகரசபையில் கூட்டு எதிரணியே இனி செல்வாக்கு செலுத்தும். நாமே கொழும்பை ஆள்வோம்.” இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார். கொழும்பு மாநகரசபையின் 2026ஆம் ஆண்டுக்கான பாதீடு நேற்று தோற்கடிக்கப்பட்டது. வாக்கெடுப்பின்போது ஆதரவாக 57 வாக்குகளும் எதிராக 60 வாக்குகளும் கிடைத்தன. இது தேசிய மக்கள் சக்திக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகின்றது. இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான்கூறியவை வருமாறு, “கொழும்பு மாநகரசபை […]

அரசியல் இலங்கை செய்தி

கொழும்பில் அநுர அரசுக்கு முதல் அடி: “பட்ஜட் ” தோற்கடிப்பு!

  • December 22, 2025
  • 0 Comments

கொழும்பு மாநகரசபையின் 2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இன்று (22) நடந்த வாக்கெடுப்பில் வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 57 வாக்குகளும், எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதற்கமைய மேலதிக மூன்று வாக்குகளால் பாதீடு தோற்கடிக்கப்பட்டது. கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் 48 ஆசனங்களை வென்ற தேசிய மக்கள் சக்தி,  சுயேச்சைக்குழு மற்றும் சில கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைந்திருந்தது. எனினும், அந்த ஆதரவு தற்போது இழக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாநகரசபையில் 117 […]

அரசியல் இலங்கை செய்தி

உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ள ராஜபக்சக்களின் பணம்: சத்திய கடதாசி வழங்க தயாராகும் நாமல்!

  • December 22, 2025
  • 0 Comments

“ ராஜபக்சக்களால் உகண்டாவில் பதுக்கப்பட்டதாகக் கூறப்படும் டொலர்களை நாட்டுக்கு கொண்டுவருவதற்கு இதுவே சரியான தருணமாகும்.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதிக்கு தேவைப்படும் பட்சத்தில் சத்திய கடதாசியை வழங்குவதற்குகூட நான் தயாராகவே இருக்கின்றேன் எனவும் அவர் கூறியுள்ளார். “ராஜபக்சக்கள் வெளிநாடுகளில் டொலர்களை பதுக்கியுள்ளனர் என தற்போதைய ஆட்சியாளர்களால் அன்று குற்றஞ்சாட்டப்பட்டது. அந்த டொலர்களை நாட்டுக்கு கொண்டுவந்தால் நல்லது. அதற்கு அரசாங்கத்தக்கு தேவைப்படும் சகல ஒத்துழைப்பை வழங்குவதற்கு […]

அரசியல் இலங்கை செய்தி

அவசர நிதிக்கான குறை நிரப்பு பிரேரணை நாளை சமர்ப்பிப்பு!

  • December 17, 2025
  • 0 Comments

இலங்கை நாடாளுமன்றம் நாளை (18) முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடவுள்ளது. டித்வா புயல் தொடர்பான நிவாரணப் பணிகளுக்குத் தேவையான அவசர நிதியை பெறுவதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெறுவதற்காகவே விசேட சபை அமர்வு நடக்கின்றது. இதற்கமைய 500 பில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்பு பிரேரணை சபையில் முன்வைக்கப்படவுள்ளது என தெரியவருகின்றது. இந்த யோசனைக்கு எதிரணிகள் முழுமையான ஆதரவை வழங்கவுள்ளன என்று அறியமுடிகின்றது. ஜனாதிபதி வசம் நிறைவேற்று அதிகாரம் இருந்தாலும், நாடாளுமன்றத்துக்கே நிதி அதிகாரம் உள்ளமை […]

அரசியல் இலங்கை செய்தி

அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட தயார்: மனோ அறிவிப்பு!

  • December 13, 2025
  • 0 Comments

“பாதுகாப்பான வதிவிட காணி” என்ற உரிமையை பெறுவதற்கு ஆளுங்கட்சி மலையக பிரதிநிதிகளுடன் இணைந்து செயற்பட தயார்.” இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அறிவித்துள்ளார். விசேட அறிக்கையொன்றை இன்று விடுத்தே மனோ கணேசன் எம்.பி. இவ்வாறு கூறியுள்ளார். “இதற்கு முன் நடைபெற்ற அவலங்களை விட இந்த முறை அவலம் அவதானத்துக்கு உரியது என நான் நம்புகிறேன். ஏறக்குறைய பெரும்பாலான மலை பகுதிகளிலும் மலை பாறைகள், மலை மேடுகள், தரை நிலங்கள் வெடித்து உள்ளன. இடைவெளிகளில் […]

அரசியல் இலங்கை செய்தி

என்.பி.பி. ஆட்சியை நம்புகிறது சர்வதேசம்: குவிகிறது உதவி!

  • December 11, 2025
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் ஊழல், மோசடி இடம்பெறாது என சர்வதேச சமூகம் நம்புகின்றது. அதனால்தான் சர்வதேச உதவிகள் அதிகளவு கிடைக்கப்பெறுகின்றன என்று ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “இலங்கை அரசாங்கம்மீது சர்வதேசம் நம்பிக்கை வைத்துள்ளது. இந்த ஆட்சியின்கீழ் ஊழல், மோசடிகள் இடம்பெறாது என்பதாலேயே அதிகளவு சர்வதேச உதவிகள் கிடைக்கப்பெறுகின்றன. இந்த ஆட்சியின்கீழ் சர்வதேச உதவிகள் கிடைக்கப்பெறமாட்டாது என சிலர் கூறிவந்தாலும் அது பொய்யென்பது உறுதியாகியுள்ளது. புலம்பெயர்ந்து […]

அரசியல் இலங்கை செய்தி

நிவாரணப் பணிகளில் அரசியல் அழுத்தமா? அரசாங்கம் கூறுவது என்ன?

  • December 10, 2025
  • 0 Comments

பேரிடர் நிவாரணப் பணிகளில் அரசாங்க அதிகாரிகளுக்கு அரசியல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை அரசாங்கம் அடியோடு நிராகரித்துள்ளது. “ அரசாங்க அதிகாரிகளுக்கு அரசாங்க தரப்பில் இருந்து எவ்வித இடையூறும் விளைவிக்கப்படுவதில்லை. அரசாங்க ஊழியர்களுக்கு சுதந்திரமும், அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. அவர்களும் சிறப்பாக செயல்படுகின்றனர்.” என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். “ தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு சர்வதேச தொடர்பு இல்லை என விமர்சனம் முன்வைக்கப்பட்டது. ஆனால் சிறப்பான முறையில் உறவு பேணப்பட்டுவருகின்றது. சுனாமி அனர்த்தத்தின் […]

error: Content is protected !!