அரசியல் இலங்கை செய்தி

உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ள ராஜபக்சக்களின் பணம்: சத்திய கடதாசி வழங்க தயாராகும் நாமல்!

  • December 22, 2025
  • 0 Comments

“ ராஜபக்சக்களால் உகண்டாவில் பதுக்கப்பட்டதாகக் கூறப்படும் டொலர்களை நாட்டுக்கு கொண்டுவருவதற்கு இதுவே சரியான தருணமாகும்.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதிக்கு தேவைப்படும் பட்சத்தில் சத்திய கடதாசியை வழங்குவதற்குகூட நான் தயாராகவே இருக்கின்றேன் எனவும் அவர் கூறியுள்ளார். “ராஜபக்சக்கள் வெளிநாடுகளில் டொலர்களை பதுக்கியுள்ளனர் என தற்போதைய ஆட்சியாளர்களால் அன்று குற்றஞ்சாட்டப்பட்டது. அந்த டொலர்களை நாட்டுக்கு கொண்டுவந்தால் நல்லது. அதற்கு அரசாங்கத்தக்கு தேவைப்படும் சகல ஒத்துழைப்பை வழங்குவதற்கு […]

அரசியல் இலங்கை செய்தி

நாமல் ராஜபக்சவே ஜனாதிபதி வேட்பாளர்: மொட்டு கட்சி அறிவிப்பு!

  • December 18, 2025
  • 0 Comments

  அடுத்த ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்சவே தமது கட்சி வேட்பாளராக களமிறங்கக்கூடும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்களின் நிலைப்பாடு இதுவாகவே இருக்கின்றது எனவும் அவர் கூறினார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது, எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே சாகர காரியவசம் மேற்படி தகவலை வெளியிட்டார். “ அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்சவே தற்போது கட்சிக்குள் அடையாளம் காணப்பட்டுள்ளார். எனினும், ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இன்னும் […]

அரசியல் இலங்கை செய்தி

பிரதமருக்கு நாமல் நன்றி தெரிவிப்பு!

  • December 13, 2025
  • 0 Comments

விசேட நாடாளுமன்ற அமர்வை கூட்டுவதற்கு நடவடிக்கை எடுத்த பிரதமருக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நன்றி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் விசேட கூட்டத்தொடர் எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறும் என்று சபாநாயகர் இன்று அறிவித்தார். வரவு- செலவுத் திட்ட கூட்டத்தொடருக்கு பின்னர் 2026 ஜனவரி 6 ஆம் திகதிவரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. எனினும், பிரதமர் கோரிக்கை விடுக்கும்பட்சத்தில் அவசர நாடாளுமன்ற அமர்வை கூட்டுவதற்கு ஏற்பாடு உள்ளது. அதற்கமையவே நாடாளுமன்றம் கூட்டப்பட்டுள்ளது. அதேவேளை, பேரிடர் தொடர்பில் விவாதிப்பதற்கு நாடாளுமன்ற […]

அரசியல் இலங்கை செய்தி

மீள்குடியேற்றம்: மஹிந்தவிடம் பாடம் கற்குமாறு நாமல் அழைப்பு!

  • December 11, 2025
  • 0 Comments

” வடக்கில் பெருமளவான மக்கள் இடைத்தங்கள் முகாம்களில் இருந்தனர். போர் முடிவடைந்த பின்னர் அவர்களை குறுகிய காலப்பகுதிக்குள் மீளக்குடியமர்த்தப்பட்டனர். மஹிந்த ராஜபக்ச ஆட்சிகாலத்தில் இதற்குரிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச எம்.பி. தெரிவித்தார். “ அபாய வலயங்களில் வீடுகள் உள்ளன. அங்குள்ள மக்களை தற்காலிக இருப்பிடங்களுக்கு அனுப்ப வேண்டும். அதன்பின்னர் மாற்று காணிகள் தேடப்பட வேண்டும். வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை குறுகிய காலப்பகுதியில் மீள் குடியமர்த்துவதற்குரிய பொறிமுறை […]

அரசியல் இலங்கை செய்தி

தித்வா புயல் கரையை கடந்தாலும் “அரசியல் புயல் ஓயவில்லை”!

  • December 10, 2025
  • 0 Comments

  நாட்டில் ஏற்பட்ட பேரிடர் தொடர்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன், இது விடயத்தில் எங்கு தவறு நடந்துள்ளது என்பது பற்றி ஆராய்வதற்குரிய நாடாளுமன்றத் தெரிவுக்குழு விரைவில் நிறுவப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் ஓரிரு நாட்களுக்குள் சபாநாயகரிடம் எழுத்துமூலம் கோரிக்கை விடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். இது தொடர்பில் நாமல் ராஜபக்ச மேலும் கூறியவை வருமாறு, “அனர்த்தம் தொடர்பில் முன்கூட்டியே தெரிந்தும் அது […]

அரசியல் இலங்கை

தற்போதைய நிலையி்ல் நாமலே எதிர்க்கட்சி தலைவர் – மனோ கணேசன்

  • November 22, 2025
  • 0 Comments

“எதிர்கட்சி தலைவரான சஜித், இப்படி ஒரு கூட்டத்தை, வெளியே கூட்டி காட்டும் வரை, நாட்டிலே நாமல் எதிர்க்கட்சி தலைவர்” என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். நுகேகொடையில் நேற்று நடைபெற்ற கூட்டம் தொடர்பில் அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார். அதிலேயே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். மனோவின் முகநூல் பதிவு வருமாறு, ” நிகழ்வு ஆரம்பிக்க, முன்-பிடித்த, பின்–பிடித்த, படங்களை, போட்டு, ஊடக(ர்) நிறுவனங்களின் விருப்பபடி, கூட்டம் பற்றி, செய்திகள் போடலாம். […]

அரசியல் இலங்கை

ஆட்சியைக் கவிழ்ப்போம்: நாமல் சபதம்! 

  • November 21, 2025
  • 0 Comments

“துறைமுகத்தில் நங்கூரமிட்டு வைப்பதற்காக கப்பல் நிர்மாணிக்கப்படுவதில்லை. அது ஆழ்கடலில் பயணித்தாக வேண்டும். புயல் வரும், சவால்களும் வரும். கௌரவ ஜனாதிபதி அவர்களே, கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே இந்த அரசாங்கம் கவிழ்க்கப்படும் என்பதை உங்கள் அரசாங்கத்துக்கு நினைவு படுத்துகின்றோம். அதற்காகவே மக்கள் சக்தி கட்டியெழுப்படுகின்றது.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். நுகேகொடையில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். எனவே, நாட்டு மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றி, அரசாங்கம் […]

அரசியல் இலங்கை

நுகேகொடை பேரணியில் மஹிந்த ராஜபக்ச பங்கேற்கமாட்டார்

  • November 7, 2025
  • 0 Comments

நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள அரசாங்க எதிர்ப்பு பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பங்கேற்கமாட்டார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச எம்.பி. இன்று தெரிவித்தார். நுகேகொடை அரசியல் சமர் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு, “ நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே இதற்குரிய நடவடிக்கை இடம்பெறவுள்ளது. இதில் பங்கேற்குமாறு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. […]

error: Content is protected !!