இலங்கை செய்தி

பொருளாதார மீட்சி குறித்து ஐரோப்பிய ஆணையாளருடன் பிரதமர் ஆராய்வு!

  • January 20, 2026
  • 0 Comments

சர்வதேச பங்களிப்புக்கான ஐரோப்பிய ஆணையாளர் சப் சிகேலாவுடன் Jozef Síkela பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய Dr. Harini Amarasooriya பேச்சு நடத்தியுள்ளார். உலகப் பொருளாதாரமன்ற மாநாட்டில் பங்கேற்பதற்காக சுவிட்சர்லாந்து சென்றுள்ள பிரதமர், அங்கு முக்கியத்துவமிக்க சந்திப்புகளை நடத்தி வருகின்றார். இந்நிலையில் உலகப் பொருளாதார மன்ற மாநாட்டிற்குச் சமாந்தரமாக மேற்படி சந்திப்பை அவர் நடத்தியுள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய கூறியவை வருமாறு, “ சர்வதேச பங்களிப்புக்கான ஐரோப்பிய ஆணையாளர் சப் சிகேலாவைச் […]

இலங்கை செய்தி

புதிய கல்வி மறுசீரமைப்பின் அவசியத்துவம் ஏற்பு!

  • January 13, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. அரசாங்கம் செயற்படுத்தியுள்ள புதிய கல்வி மறுசீரமைப்பு மற்றும் அதன் அவசியத்தை ஏற்றுக்கொள்வதாகவும், 06ஆம் வகுப்பு பாடத்திட்டம் புதிய திருத்தத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகள் இதன்போது சுட்டிக்காட்டினார்கள். புதிய கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயாராக அவர்கள் கூறியுள்ளனர். தேசிய கல்வி ஆணைக்குழு, தேசிய […]

அரசியல் இலங்கை செய்தி

ராஜபக்ச ஆட்சிக்கு ‘இராஜதந்திர தலையிடி’ கொடுத்த தூதுவரை சந்தித்தார் மஹிந்த!

  • January 13, 2026
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் இன்று சந்தித்து பேச்சு நடத்தினார். இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக செயல்படும் ஜுலி சங், எதிர்வரும் 16 ஆம் திகதி தாயகம் திரும்புகின்றார். தனது இராஜதந்திர பணியை முடித்துக்கொண்டு திரும்பும் அவர், கடந்த சில நாட்களாக முக்கியத்துவமிக்க சந்திப்புகளை கொழும்பில் நடத்தி வருகின்றார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை நேற்று சந்தித்திருந்தார். இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் அவர் இன்று பேச்சு நடத்தினார். “ அமெரிக்க-இலங்கை […]

இலங்கை செய்தி

16 ஆம் திகதி விடைபெறும் அமெரிக்க தூதுவர் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

  • January 13, 2026
  • 0 Comments

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Julie Chang , ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை Anura Kumara Dissanayake சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி 16ஆம் திகதி கொழும்பில் இருந்து வெளியேறுகின்றார் அமெரிக்க தூதுவர் ஜூலி சாங். இந்நிலையில் நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தார். இதன்போது, ஜூலி சாங் தனது பதவிக்காலத்தில் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதற்காக மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளை ஜனாதிபதி […]

இலங்கை செய்தி

இலங்கை மீண்டெழ சீனா துணை நிற்கும்!

  • January 12, 2026
  • 0 Comments

கொழும்பு வந்துள்ள சீன வெளிவிவகார அமைச்சர் Wang Yi , இலங்கை வெளிவிவகார அமைச்சருடன் பேச்சு நடத்தியுள்ளார். இலங்கை நேரப்படி இன்று காலை நாட்டுக்கு வந்த சீன வெளிவிவகார அமைச்சருக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்பளிக்கப்பட்டது. சீன தூதுரக அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர். இரு தரப்பு பேச்சுவார்த்தையின்போது, டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு சீனா வழங்கிய ஒத்துழைப்புக்கு அமைச்சர் விஜித ஹேரத் Vijitha Herath நன்றி தெரிவித்தார். அத்துடன், இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதற்குரிய திட்டங்கள் பற்றியும் இருவரும் கலந்துரையாடியுள்ளனர் […]

இலங்கை செய்தி

இலங்கையிலிருந்து விடைபெறும் அமெரிக்க தூதுவர் பிராந்திய பாதுகாப்பு குறித்து கழுகுப்பார்வை!

  • January 9, 2026
  • 0 Comments

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் Julie Chung , பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை Air Vice Marshal Sampath Thuyacontha சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இலங்கையில் தனது பதவிகாலத்தை நிறைவுசெய்துகொண்டு எதிர்வரும் 16 ஆம் திகதி கொழும்பிலிருந்து அமெரிக்க தூதுவர் தாயகம் திரும்புகின்றார். இந்நிலையிலேயே பாதுகாப்பு செயலாளரை அவர் நேற்று பிரியாவிடை நிமித்தம் பாதுகாப்பு அமைச்சில் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பின் போது, பாதுகாப்புச் செயலாளரும் அமெரிக்கத் தூதுவரும் இரு நாடுகளுக்கும் […]

அரசியல் இலங்கை செய்தி

சிறைச்சாலை சென்று டக்ளஸை சந்தித்தார் நாமல்!

  • January 3, 2026
  • 0 Comments

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை Douglas Devananda , நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa இன்று (03) சந்தித்துள்ளார். மஹர சிறைச்சாலைக்கு சென்றே டக்ளஸை சந்தித்து, நாமல் ராஜபக்ச நலம் விசாரித்துள்ளார் என சிங்கள தொலைக்காட்சியொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மஹர சிறைச்சாலை வளாகத்தில் வைத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட நாமல் ராஜபக்ச, புலி டயஸ்போராக்களை திருப்திப்படுத்துவதற்காகவே டக்ளஸ் கைது செய்யப்பட்டுள்ளார் எனக் குற்றஞ்சாட்டினார். டக்ளஸ் தேவானந்தாவுக்கு இராணுவத்தால் வழங்கப்பட்ட துப்பாக்கிகளில் ஒன்று, […]

இலங்கை செய்தி

இலங்கை, பங்களாதேஸ் இரு தரப்பு உறவை வலுப்படுத்த திட்டம்!

  • January 2, 2026
  • 0 Comments

பங்களாதேஸ் இடைக்கால அரசாங்கத்தின் ஆலோசகர் முகமது Mohammad Yunus யூனுஸை, இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் Vijitha Herath சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். பங்களாதேஸின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் டாக்டா சென்றிருந்தார். இவ்விஜயத்தின்போதே மேற்படி சந்திப்பும் இடம்பெற்றுள்ளது. இதன்போது பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்காக பங்களாதேஸ் வழங்கிய ஒத்துழைப்புகளுக்கு வெளிவிவகார அமைச்சர் நன்றி தெரிவித்தார். இலங்கை மற்றும் பங்களாதேஸ் ஆகிய நாடுகளுக்கிடையிலான உறவை மேலும் […]

இலங்கை செய்தி

மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றார் ஜனாதிபதி: தலதா மாளிகையிலும் வழிபாடு!

  • January 1, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, புத்தாண்டை முன்னிட்டு வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு இன்று (01) காலை விஜயம் செய்து வழிபாட்டில் ஈடுபட்டார். அத்துடன், மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசியும் பெற்றார். தலதா மாளிகை வளகாத்தில் நடைபெற்ற மத வழிபாடுகளில் பங்கேற்றதோடு , புத்தாண்டை முன்னிட்டு தலதா மாளிகையை தரிசிக்க வந்த மக்களுடன் சுமூகமான உரையாடலில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து,மல்வத்து விகாரைக்கு ஜனாதிபதி சென்றார். மல்வத்து மகாநாயக்க தேரர் அதி வணக்கத்திற்குரிய திப்பெட்டுவாவே ஸ்ரீ […]

இலங்கை செய்தி

ரணில் -சஜித் விரைவில் நேரடி சந்திப்பு!

  • December 31, 2025
  • 0 Comments

  ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க Ranil Wickremesinghe மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச Sajith Premadasa ஆகியோருக்கிடையில் நேரடி சந்திப்பு இடம்பெறவுள்ளது. 2026 ஜனவரி முற்பகுதியளவில் மேற்படி சந்திப்பு நடைபெறும் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களுக்கும், சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று கொழும்பில் நேற்று (31) நடைபெற்றது. ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் அக்கட்சியின் பிரதித் தலைவர் ருவான் […]

error: Content is protected !!