வவுனியாவில் வாள்வெட்டு தாக்குதல் : மூவர் கைது!
![](https://iftamil.com/wp-content/uploads/2023/06/Arrest-4-jpg.webp)
வவுனியா – பண்டாரிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (29) இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
வவுனியா – பண்டாரிக்குளம் பகுதிக்கு ஜீப் ரக வாகனம் மற்றும் மோட்டர் சைக்கிள் என்பவற்றில் வந்த குழுவினர் அப் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரை வாளால் வெட்டி விட்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.
இதன்போது கிராம மக்கள் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கிய போதும் பொலிசார் சம்பவ இடத்திற்கு வரவில்லை என பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனையடுத்து கிராம மக்கள் விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு வருகை தந்த அதிரடிப்படையினர் மூவரை செய்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு