உலகம் செய்தி

உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட சுவிஸ் குடிமகன் ஈரான் சிறையில் உயிரிழப்பு

ஈரானில் கைது செய்யப்பட்டு உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட சுவிஸ் நாட்டவர் சிறையில் இறந்துவிட்டதாக ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கிழக்கு நகரமான செம்னானில் உள்ள சிறையில் மற்றொரு கைதியுடன் அந்த நபர் “தற்கொலை செய்து கொண்டார்” என்று ஈரானின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுவிஸ் குடிமகனின் உயிரைக் காப்பாற்ற சிறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர், ஆனால் அவர்களின் முயற்சிகள் பலனளிக்கவில்லை என்று நீதித்துறை நடத்தும் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த நபரின் அடையாளம் குறித்து செய்தி நிறுவனம் எந்த விவரத்தையும் வழங்கவில்லை.

அவர் “உளவு பார்த்ததற்காக ஈரானிய பாதுகாப்புப் படைகளால் கைது செய்யப்பட்டார்” என்றும், வழக்கு “விசாரணையில் உள்ளது” என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்து.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!