இலங்கை

இலங்கை சுங்க அதிகாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கை இடைநிறுத்தம்: வெளியான அறிவிப்பு

சுங்க உத்தியோகத்தர்கள் தமது கடமைகள் தொடர்பான நடவடிக்கைகளை மாத்திரம் மேற்கொள்வதற்கு எடுத்த தீர்மானம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை சுங்க தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இன்று (13) பிற்பகல் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி கூட்டமைப்பின் தலைவர் அமில சஞ்சீவ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் விஜித ஹேரத் கடந்த 7ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போது கொள்கலன் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் எமது அதிகாரிகள் தொடர்பில் முன்வைத்த பொய்யான கருத்துக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமது கடமைகள் தொடர்பான பணிகளை மாத்திரம் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தனர்.

இதனால் துறைமுகத்தில் உள்ள கொள்கலன்களை அகற்றுவதில் கடும் தாமதம் ஏற்பட்டது.

எவ்வாறாயினும், தற்போது தேர்தல் காலப்பகுதி என்பதால் கொள்கலன் வாகனங்கள் தரித்து நிற்க வேண்டி வந்தால் சாரதிகள் மற்றும் உதவியாளர்கள் வாக்களிக்க முடியாமல் ​போகும் என்பதை கவனத்தில் கொண்டு கடமை தொடர்பான நடவடிக்கைகளை மாத்திரம் மேற்கொள்ளும் தீர்மானம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுங்க தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!