கஜேந்திரகுமாரை உடன் இடைநிறுத்துங்கள்: அர்ச்சுனா முறைப்பாடு!
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு gajendrakumar Ponnambalam எதிராக சபாநாயகரிடம் இன்று (7) முறைப்பாடு செய்துள்ளார் அர்ச்சுனா எம்.பி. Archuna.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது.
ஆரம்பக்கட்ட சபை நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர், சிறப்புரிமை பிரச்சினையை எழுப்பினார் அர்ச்சுனா எம்.பி.
யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டே அவர் இந்த முறைப்பாட்டை செய்திருந்தார்.
இது தொடர்பில் அவர் கூறியவை வருமாறு,
“புற்றுநோயால் உயிரிழந்த எனது தாய் தொடர்பில் அநாகரீகமாக இழிவான வார்த்தை பிரயோகத்தை கஜேந்திரகுமார் எம்.பி. மேற்கொண்டிருந்தார்.
சாதாரண அடிதட்டு மக்கள்கூட பயன்படுத்தாத இழிவான வார்த்தைகளை அவர் பயன்படுத்தி இருந்தார்.
எனவே, நாடாளுமன்ற ஒழுக்காற்று தொடர்பான குழுவில் இடம்பெறுவதற்கு கஜேந்திரகுமார் எம்.பிக்கு தகுதி உள்ளதா?
நாடாளுமன்றத்தில் எனக்கு அருகில் அமர்ந்திருக்கும் கஜேந்திரகுமாரை வேறொரு இடத்துக்கு மாற்று மாறு கோருகின்றேன்.
இது தொடர்பான விசாரணை நடக்கும்வரை நாடாளுமன்ற ஒழுக்காற்று மற்றும் சிறப்புரிமை குழுக்களில் இருந்து அவரை இடைநிறுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றார் அர்ச்சுனா எம்.பி.





