வட அமெரிக்கா

அமெரிக்காவில் பல்கலைக்கழகத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு; நால்வர் படுகாயம்

அமெரிக்காவில் ரிச்மண்ட் பகுதிக்கு தெற்கே விர்ஜீனியா மாகாண பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இதில், 4 ஆயிரம் பேர் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், திடீரென இந்த பல்கலைக்கழகத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் 2 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் என 4 பேர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து, தகவல் அறிந்து பொலிஸார் சம்பவ பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

இதில், ஆயுதங்கள் வைத்திருந்தனர் என கூறி அந்த பகுதியில் இருந்த 2 பேரை பொலிஸார் பிடித்து சென்றனர். எனினும், துப்பாக்கி சூட்டுக்கான குற்றச்சாட்டு எதுவும் அவர்கள் மீது சுமத்தப்படவில்லை. ஒருவர் அனுமதி பெறாத துப்பாக்கியை மறைத்து வைத்திருக்கிறார். 2 பேருக்கும் 21 வயது ஆகிறது.

துப்பாக்கி சூட்டில் காயமடைந்த 4 பேரும் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இதுபற்றி அந்த பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், வளாகம் பாதுகாப்பானது என அறிவிக்கப்படும் வரை லாக்டவுன் தொடரும் என தெரிவித்து உள்ளது.

அவர்கள் இருவரும் அந்த பல்கலைக்கழகத்தில் படிக்கவில்லை. இவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் என்ன தொடர்பு என்பது தெரியவில்லை. இதுபற்றி பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

(Visited 54 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!