வட அமெரிக்கா

மெக்சிகோ பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூடு – அறுவர் பலி; 26 பேர் காயம்!

மெக்சிகோவில் அதிகாலையில் நடைபெற்ற பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர், 26 பேர் காயம் அடைந்துள்ளனர். இதில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

தென் அமெரிக்க நாடான மெக்சிகோவில் உள்ள சோனோரா மாகாணத்தின் சிடெட் ஒபெகன் என்ற நகரத்தில் 15வயது சிறுமி ஒருவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக பலரும் கூடியிருந்தனர். பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பலரும் உற்சாகமாக பார்ட்டியில் கலந்து கொண்டு இருந்தனர்.

அப்போது திடீரென அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் நிகழ்விடத்திலேயே பலியானார். 26 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிஸார், காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மெக்சிகோவில் அதிகாலையில் நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சூடு அந்நாட்டை அதிரவைத்துள்ளது. இதுகுறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக கடந்த 17ம் திகதி மெக்சிகோவில் நடந்த கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டனர்.

(Visited 12 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்