இலங்கை

களுத்துறை நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பியோடிய சந்தேகநபர்..!

களுத்துறை நீதிமன்ற வளாகத்தில் இருந்து சந்தேக நபர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.

கொள்ளை மற்றும் ஹெரோயின் வைத்திருந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபருக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேகநபர் அளுத்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்த நிலையில் அவர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர் பொலிஸ் ஜீப்பில் நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அதன் கதவைத் திறந்ததும் அவருடன் கைவிலங்கிடப்பட்ட மற்றைய சந்தேகநபர் முகத்தில் தாக்கி கைவிலங்குகளை கழற்றிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீதிமன்றில் கடமையாற்றியிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சந்தேக நபரை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த அதிகாரிகள் அவர்களை துரத்திச் சென்ற போதும் சந்தேக நபர் அவர்களிடமிருந்து தப்பிச் சென்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபரை கண்டுபிடிப்பதற்காக அளுத்கம பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

(Visited 66 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!